மூதூரில் வாய்க்காலுக்குள் புகுந்த வாகனம்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இன்று(18)  மாலை வாகனமொன்று ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த  வாகனத்தில் சாரதி மாத்திரம் பயணித்துள்ளதுடன் அவர் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

கிழக்கு ஆளுநருக்கு வலுப்பெற்று வரும் ஆதரவு

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்   நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று அம்பாறை, அரந்தலாவ சர்வதேச பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி... Read more »

காட்டு யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்..!

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று அதிகாலை  உயிரிழந்துள்ளார். 32   வயதுடைய  நாகராசா முரளிதரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர்... Read more »

வெப்பத்தால் வெள்ளரி பழத்திற்கு கிராக்கி

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பகுதிகளில்  வெள்ளரிப்பழம்... Read more »

இறால் பண்ணையாளர்களுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு…!

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம்(14) மண்முனை தென்மேற்கு... Read more »

இந்து மக்களின் உணர்வுகளை சிதைக்கும் பொலிஸார்…!

இந்து மக்களின் அவர்களின் உணர்வுகளை சிதைக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதை இனி வரும் காலங்களில் பார்த்து மௌனித்திருக்க போவதில்லை என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் இன்று... Read more »

வெடுக்குநாறிமலை சம்பவத்திற்கு மட்டக்களப்பில் போராட்டம்

வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது. சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி... Read more »

மீன்பிடிப்பதற்காக மூவருடன் சென்ற படகு மாயம்!

மீன்பிடிப்பதற்காக கற்பிட்டி கடலில் இருந்து புறப்பட்ட படகொன்று மீண்டும் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். ஈச்சங்காடு பிரதேசத்தை சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூவர் இந்த படகில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.... Read more »

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »

சாய்ந்தமருதில் மத்ரஸா மாணவன் மர்ம மரணம்…! மௌலவிக்கு விளக்கமறியல்…!

சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த காத்தான்குடி பகுதியை சேர்ந்த மாணவன் மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான   4 சந்தேக நபர்களை  கல்முனை நீதிவான் நீதிமன்றினால்.கடும் நிபந்தனையின் கீழ்... Read more »