கடலாமை இறைச்சியுடன் நாவற்குழியில் சிக்கிய நபர்

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது... Read more »

சண்டித்தனம் செய்யும் யாழ் போதனா வைத்தியசாலை காவலாளி-கைதாகுவாரா?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம்  சிறி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் தனது தாயாரினை... Read more »

யாழில் பொலிசாரின் மனு நிராகரிப்பு-போராட்டத்திற்கு தயாராகும் அமைப்புகள்

ஜனாதிபதி யாழிற்கு இன்று விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ் நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு சட்டத்தை மீறாத வகையில், ஜனநாகய ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது எனவும்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாரமும் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாரமும் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் நேற்று செவ்வாய் கிழமை 02;01/2024  வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் லகுகல கிராம சேவகர் பிரிவில் 60 குடும்பங்களுக்கும், பாணம அபயபுர பகுதியில் 110 குடும்பங்களுக்கும் பாணம... Read more »

ஜனாதிபதியின் வருகை-போராட்டத்திற்கு தயாராகும் தமிழ் அமைப்புக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், தொடர்ந்து 7 ஆம் திகதிவரை வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணிலின் வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் ஒன்றை யாழில் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்... Read more »

இரணைத்தீவு விவகாரம்-கடற்படைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த  அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த விசாரணையின்போது ஆணைக்குழு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. “கிளிநொச்சி மாவட்டத்தின், இரணைத்தீவுக்கு... Read more »

நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம்

புத்தாண்டு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைபடும் அபாயம் இருப்பதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று... Read more »

கிளிநொச்சிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொலிஸ் உயர் அதிகாரி மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு நாளை வரவுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்த்தன இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து  மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு... Read more »

வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் 02.01.2024 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன், புதிதாக 18 வயது பூர்த்தி... Read more »

யாழில் பொலிசார் மீது டக்ளஸ் அதிரடி குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய... Read more »