புகையிரத கடவை விபத்துக்களை தடுக்க இ-கேட் திட்டம்!

அபாயகரமான தொடருந்து விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை தொடருந்து திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, தொடருந்து வலையமைப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் இ-கேட் அமைப்பை அமைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.... Read more »

யூரியா உரத்தை 5000 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

அடுத்த பெரும்போகத்திலிருந்து ஒரு மூடை யூரியா உரத்தை 5 000 ரூபாவுக்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்... Read more »

மகிந்த ராஜபக்ச சந்தர்ப்பங்களை தவற விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் – வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

முன்னாள் ஜனாதிபதியும் பெரமுன கட்சியின் தலைவர்களில் ஒருவருமான மகிந்த ராஜபக்ச கடந்த காலத்தில் இரண்டு தடவைகள் ஜனாபதியாக இருந்த போது கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டிருக்க முடியும். அதற்கு சிங்கள தமிழ் தரப்பில் யாருடைய எதிர்ப்பும் இருந்திருக்க... Read more »

பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்  இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு இசின்ரியு கராத்தே பாடசாலையின் தலைவர் சென்சய் சூசைநாதர் யசோதரன் தலைமையில் இடம்பெற்றது.   பாரம்பரிய கலை வடிவங்களான கராத்தே... Read more »

மத்திய அரசினால் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்கள் மீள வழங்கப்படும் – பிரதமர் விக்னேஸ்வரன் சந்திப்பில் இணக்கம்

13-வது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சிலவற்றை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில் அதனை மீள வழங்குவதற்கு பிரதமர் சாதகமாகப் பதிலளித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை பிரதமர் தினேஷ்... Read more »

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ்!

களுத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வஸ்கடுவ பகுதியில் வசிக்கும்... Read more »

சாரதி அனுமதி அட்டை தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவித்தல்..!

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். எட்டரை இலட்சம் ஓட்டுநர்... Read more »

ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரிமாளிகையை ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானம்!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி மாளிகை, செயலகம், பிரதமரின் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன சுற்றுலா தளங்களாக பராமரிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்... Read more »

மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் – ஆய்வாளர் நிலாந்தன்

புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம்.குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது.அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்;மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்;நாகரீகமாகவும் செய்கின்றார்கள். எதுவாயினும், தமிழ் மக்களைக்... Read more »

உதவித்திட்டம் வழங்கி வைப்பு..!

நேற்றையதினம் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சங்கரத்தை அம்பாள் அறக்கட்டளை ஆகியன இணைந்து மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தன. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கே இவ்வாறு, கல்வியை தடையின்றி தொடர்வதற்கான உதவித்திட்டம் வழங்கி... Read more »