மக்கள் மீதான சுமை வருட இறுதிக்குள் 75 சதவீதமாக குறைக்கப்படும் – நளின் பெர்னாண்டோ

இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இந்த... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316... Read more »

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நான்கு நாள் விஜயம் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் விசேட உலங்கு வானூர்தியில் குருநகர் செம்யேம்ஸ் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார். ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர், வடக்கு ஆளுநர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றதை... Read more »

காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார்

இன்று காலை வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை உள்ளடக்கிய நீதிமன்ற உத்தரவை உள்ளடக்கிய மனுவை வழங்க சென்றிருந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் அற்ற வேளை பொலிஸார் திரும்பிச் சென்று மீள வீட்டிற்குள்... Read more »

யாழ் மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளநிலையில் யாழில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்கா... Read more »

பரிதாபகரமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ்... Read more »

ரணில் வருகை-யாழில் வெடித்தது போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில்  தற்போது பாரிய போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை  ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

உங்கள் ஒற்றைக் கையொப்பம் நம்  உறவுகளை சிறைமீட்கட்டும்!

உங்கள் ஒற்றைக் கையொப்பம் நம்  உறவுகளை சிறைமீட்கட்டும்!” – குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு…! அன்பிற்கினிய சமூக நேசர்களே, கடந்த நாட்களில் நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் கலந்துரையாடியதன் அடிப்படையில், ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து’ ப் பிரதிகளை காலக்கிரமத்தில் தயார்படுத்தி, எதிர்வரும் வெள்ளிக்... Read more »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன்,... Read more »

தென்னிலங்கையில் பரபரப்பு-பிக்கு கடத்தல்

கொழும்பு மாவட்டத்தின் கொஸ்கம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த பிக்குவை நேற்றையதினம் இரவு கடத்திச் சென்றுள்ளதாக காவல்நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிகுரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையில் கடமையாற்றிய தேரர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.... Read more »