200 கிலோகிராம் போதைப்பொருளுடன் அறுவர் கைது

காலி கடற்பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து பல நாள் மீன்பிடி படகு, போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோ கிராம் நிறையைக்கொண்ட இந்த போதைப்பொருள் 278 பொதிகளாக பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. படகில் சென்றிருக்கும் சந்தேகநபர்கள்,... Read more »

சிக்கித்தவிக்கும் 250 இலங்கையர்கள்

ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள்கூட இன்றி பலவந்தமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

கோர விபத்து-மாணவி பலி

நீர்கொழும்பு பிரதேசத்தில் கனரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 13 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (4) இடம்பெற்றுள்ளது. சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த... Read more »

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.டெங்கு நோயாளர்களின் கணிசமான அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, கொழும்பில்... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்... Read more »

வறுமையில் தவிக்கும் இலட்சக்கணக்கான இலங்கை மக்கள்

இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது. தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை... Read more »

வவுனியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு வருகை தரவுள்ளதால் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்து தொடர்பிலான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதனையடுத்து மாநகர சபையினை சூழவுள்ள இடங்களில் பொலிஸ்... Read more »

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே  குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் அவர்களிடம்... Read more »

கடலுக்கு சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்

கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண்பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உட்பட மூவர் நேற்று... Read more »

ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில்-யாழில் வாள் வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில்... Read more »