தீவு ஒன்றில் இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில், 56க்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

சமூக சேவைகள் அலுவல்கள்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் திணைக் களத்தின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய தினம் 19.01.2024 வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாணம் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு உணவு வழங்கலும் விநியோகமும் தொழில்துறையும்,... Read more »

ரயில் மோதி ஒருவர் பலி

களுத்துறை – மக்கொன ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடையவராவாரென தெரிவிக்கப்படுகிறது. அளுத்கமையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் களுத்துறை நாகொடை... Read more »

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 லட்சம் குடும்பங்கள்

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 லட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 6 லட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான்... Read more »

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடாத்த திட்டம்!கிளிநொச்சி இளைஞனுக்கு ஜேர்மனியிலிருந்து வந்த கோடிக்கணக்கான பணம்!

யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக 11 தடவைகள் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு. பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும்... Read more »

ஜனாதிபதிக்கு உகண்டாவில் வரவேற்பு

உகண்டாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு துப்பாக்கி வேட்டு முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கம்பாலா நகரை சென்றடைந்த ஜனாதிபதியை உகண்டாவின் வெளிவிவகார அமைச்சர் ஓரியெம் ஒகெல்லோ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கனகநாதன் ஆகியோர்... Read more »

தென்னிலங்கையில் பரபரப்பு

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் சாரதி உயிரிழந்துள்ளார்.... Read more »

மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து... Read more »

கிளிநொச்சியில் பூசகருக்கு ஏற்பட்ட நிலை

கிளிநொச்சியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பூசகர் ஒருவருக்கு எட்டு வருடங்களுக்கு பின் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம்... Read more »

கட்டைக்காட்டில் கடற்படை திடீர் சுற்றிவளைப்பு-தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கடற்பகுதியை அண்டிய பிரதேசத்தை திடீரென சுற்றிவளைத்த கடற்படை பல மீனவர்களையும்,அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர். இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசிவலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.... Read more »