இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் புதிய சாதனை!

இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெர்மனியில் நடந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.06 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். இதன்படி, 100 மீற்றர் போட்டியில் இலங்கை சாதனையுடன் தெற்காசிய சாதனையும்... Read more »

21வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்!

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்று நாளை மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின்... Read more »

அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம்: மேலும் இருவர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் 2 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற... Read more »

இந்திய கடனை இலங்கை ரூபாவில் மீள செலுத்துவதற்கு இணக்கம்.

இந்தியாவினால் மருந்துகள் கொள்வனவிற்காக வழங்கப்படும் கடனை, இலங்கை ரூபாவிலேயே மீள செலுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் டொலர் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னர், இந்தியா அதற்கு இணங்கியுள்ளது. இதேவேளை பிரெஞ்சு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாளை... Read more »

மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யா வைத்துள்ள செக்.

ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை மேற்குலக நாடுகள் நீக்குமாயின், முற்றுகைக்குள்ளான உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானிய உணவுகளை கப்பல்கள் மூலம் கொண்டுசெல்ல அனுமதிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான உணவை ரஷ்யா பணயமாக வைப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில்,... Read more »

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் 13 வருடங்களின் பின்னர் விடுதலை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை மேல் நீதிமன்றம் வழங்கிய ஆயுட்கால சிறைத்தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுதலை... Read more »

தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கை கடற்படையிடம் சிக்கிய பலர் கைது.

திருகோணமலை பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து படகு மூலம் வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து... Read more »

மெக்சிகோவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல் குண்டுகளை... Read more »

நீதிமன்றின் உத்தரவை மீறிய மகிந்த – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு.

 நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர், இதுவரை தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர், நீதிமன்றில் நேற்று (25) இதனை அறிவித்துள்ளார். கடந்த... Read more »

பலர் வேலை இழக்கும் அபாயம்! கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் போதுமான பொருட்களை வாங்குவதற்குக் கூட வருமானம்... Read more »