‘பூஸ்டர்’ தடுப்பூசியினை போடுவதால் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பிக்க முடியும்! வைத்தியர் யமுனாநந்தா.

மூன்றாம் கட்ட தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தாதெரிவித்தார்

யாழ் போதனா வைத்தியசாலையின் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

ஒமிக்ரோன் வைரஸானது மேலைத்தேய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது எனினும் இலங்கையை பொறுத்தவரை பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியினை பெற்றதன் காரணமாக  தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு

எனினும் கொரோனா  தடுப்பூசி பெற்று ஆறு  மாதத்தின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன்  காரணமாக  பூஸ்டர் டோஸ்வழங்கப்படுகின்றது அதனை அனைவரும் பெறும் போது ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிக குறைவாகும்

எனினும் ஒமிக்ரோன் தொடர்பில் அதிகம் பயப்படத் தேவையில்லை எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்து கூட்டம் கூடுவதை தவிர்த்தால் தொற்றிலிருந்து நம்மைபாதுகாத்துக்கொள்ள முடியும்

குறிப்பாக கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை இந்த ஓமிக்ரோன் வைரஸானது கடுமையாகப் பாதிக்கும் எனவே சிறுவர்களை நாம் இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு கட்டாயமாக  தடுப்பூசியினைபெற வேண்டும் அத்தோடு யாழ் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் தடுப்பூசியினை   பெற பின்னடிப்பது மிகவும் தவறானது

அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியினைபோடுவதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் அத்தோடு  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் ஒமிக்ரோன் போன்ற வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்என்றார்.

Recommended For You

About the Author: admin