500 ஆண்டு கால மதமாற்ற வரலாற்றில் முதல்முறையாக மத மாற்றிகள் சிறையில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை.

சரியாக 500 ஆண்டுகள்
துப்பாக்கி முனையில் வாள்முனையில் மதம் மாற்ற முயன்ற காலம்
மன்னார்த் தீவில் தொடங்கிய முயற்சி

500 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நிலத்தில் எவ்விதத் தடையும் இன்றி மதமாற்றங்கள் தொடர்ந்தன.

500 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக மத மாற்றிகள் சிறையில்

.

மதம் மாற மறுத்தவர்களைச் சிறையிட்டு வதைத்துக் கொன்று காலங்கள் போயின போயின.

இலங்கை வவுனியா மாங்குளம் அருகே பணிக்கன் குளம் அங்கே கிழவன் குளம்.

கார்த்திகை 11 சனிக்கிழமை 27 11 2021
பிற்பகல் 1345 மணி

சிவதொண்டர் மார்க்கண்டு செகதீச்சரன் இல்லம்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முல்லைத்தீவில் கூடிய காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கிறித்தவ சபைகளின் அட்டூழியங்களை எடுத்துக்கூறிய சிவ தொண்டர் அவர்.

சொகுசு வண்டி ஒன்று இல்லத்தின் முன் வந்து நிற்கிறது. உந்துருளி ஒன்றும் தொடர்ந்து வந்தது.

அதில் இருந்து நான்கைந்து பேர் இறங்கி மார்க்கண்டு செகதீச்சரனின் இல்லத்துக்குள் நுழைகிறார்கள்

ஆண்டவர் உங்களைக் காப்பாற்றுவார் எனக் குடி மயக்கத்தில் கூறுகிறார்கள். மது போதையின்  மயக்கத்தில் இருந்தனர்.

தொடக்கத்தில் இயல்பாகப் பேசியோர் நேரம் போகப் போக மிரட்டல் தொனியில் பேசினர். மதம் மாறுமாறு வலியுறுத்தினர்.

உருட்டினர் மிரட்டினர் சினந்து எரிந்தனர் சுடும் சொற்களை வீசினர்.

சைவ சமயத்தையும் சைவ கடவுளர்களையும் இழித்தும் பழித்தும் நகுகின்றனர்.

மார்க்கண்டு செகதீச்சரன் துணிச்சல் மிக்கவர். சொல்லுக்குச் சொல்லால் பதிலடி கொடுக்கிறார். சொற்களாலேயே விரட்டுகிறார்.

மாங்குளம் காவல்நிலையத்தில் நடந்ததைத் தெரிவிக்கிறார். இணைப்பில் அவரது முறையீடும் காவல் நிலையம் தந்த குறிப்பும்.

அஞ்சி அஞ்சிச் சாகின்ற உலகிலே அஞ்சாது நிமிர்ந்து நின்றவர் மார்க்கண்டு செகதீச்சரன்.

அவரது முதுகுத்தண்டு நிமிர்ந்ததால் சைவ உலகமே நிமிர்ந்தது.

சொல்லுக்குச் சொல் பதிலடி
சட்டத்துக்குள் காவல் நிலையத்தில் முறையீடு
துணிச்சலின் அடையாளம்
வீறு கொண்ட சைவ எழுச்சியின் அடையாளம் மார்க்கண்டு செகதீச்சரன்.

சைவ உலகம் அவரைப் பாராட்ட வேண்டும் வாழ்த்தவேண்டும் போற்றவேண்டும்.

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சைவர்களின் தொலைப்பேசி அழைப்புகளால்
+94768947121
மார்க்கண்டு செகதீச்சரனார் மட்டுமன்று மதமாற்றிகளை எதிர்கொள்ள முனைகின்ற ஒவ்வொரு சைவரும் தலைநிமிர்வர்.

மதமாற்றிகளின் குதிக்கால் பிடரியில் தொட
நச்சுத் தீநுண்மிகளை
சமூகப் பகையை
புற்று நோய்த் தூண்டிகளை
ஓட ஓடச் சைவர் விரட்டுவர்.

Recommended For You

About the Author: Editor Elukainews