வவுனியா மகாறம்பைக்குளத்தில் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டல்!

வவுனியா மகாறம்பைக்குளத்தில், 10 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல், இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைக்கு குழு இணைத் தலைவருமான கு.திலீபன், அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
குறித்த வீடு, கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே, வவுனியா மகாறம்பைக்குளத்தில், பெண் தலைமைத்துவ குடும்பமான திருமதி சுதாகரன் தவறஞ்சினியின் வீட்டிற்கான அடிக்கல், இன்று நாட்டி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாஸன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிராம சேவையாளர் மற்றும் ஈபிடிபி முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews