மன்னாரில் 15 நாட்களில் 328 கொரோனா தொற்றாளர்கள்!

மன்னாரில், நேற்று, 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களில், 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக, இன்று விடுத்துள்ள அறிக்கையில், விடயங்களை தெளிவுபடுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில், நேற்றையதினம் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களில், 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம், 2 ஆயிரத்து 704 தொற்றாளர்களும், தற்போது வரை 2 ஆயிரத்து 721 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில், தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதேவேளை, தலைமன்னார் பகுதி தபாலகத்தில் கடமை புரியும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தபாலகம் மூடப்பட்டுள்ளது.
அண்மையில், மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தலைமன்னார் பகுதி தபாலகத்தை சேர்ந்தவர்களுக்கு, நேற்று காலை, தலைமன்னார் வைத்தியசாலையில், அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, தலைமன்னார் தபாலகத்தில் கடமையாற்றும் 7 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால், தலைமன்னார் தபாலகம் உப தபாலகங்கள், நேற்று மதியம் 12.00 மணியுடன் மூடப்பட்டுள்ளன.
என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews