யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் வாள்களுடன் ரவுடிகள் அட்டசாகம்! ஒருவர் காயம், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு…!

யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் நேற்றய தினம் இரவு 25ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வாள்கள் சகிதம் நுழைந்து ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உடைத்து, பெண்களை அச்சுறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

25ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வாள்களுடன் சென்று , வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் அதே கும்பல் பழம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து தூக்கத்தில் இருந்த பெண்களை அச்சுறுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தில் பழம் வீதியில் உதயசூரியன் சுதர்சன் என்ற இளைஞன் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் நல்லூர் அரசடி நான்காம் ஒழுங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews