பொது இடங்களில் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது குறித்து வெளிவந்த தகவல்!

பொது இடங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கொரோனா ஒழிப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews