கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வழியாக கொழும்பு – கண்டி வீதியையும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியையும் பயன்படுத்துமாறு, வீதி அபிவிருத்தி அதிகாரச சபை, சாரதிகளைக் கோரியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews