யாழில் கடற்கரையை அண்டிய பகுதியில் வசிப்போருக்கு அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக கடற்கரையினை அண்டிய பகுதியில்  வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு  கடல் தொழிலுக்கு செல்வோர் மிகவும்  அவதானமாக செயற்படுமாறும் மறு அறிவித்தல் வரும் வரைஅவதானமாக செயற்படுமாறும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews