புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

புத்தளம்- மன்னார் வீதி, பஸ்பராபத் சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகனதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த றிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான புத்தளம், வேப்படுமவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயது நபரே மரணமடைந்தார்.

குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 70 வயது நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews