மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் சாவு

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை  காரணமாக ராகலை மாகுடுகலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் நேற்று வீசிய கடும் காற்றினால் குறித்த  மரம் சரிந்து விழுந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தப்பளை  ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி ராஜ்குமார் என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews