க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் முறையினூடாக விண்ணப்பங்களைப் பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews