ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்றையதினம்(19) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினால் 800mg ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் திருமணமாகாத உத்தியோகத்தர் ஆவார்.
சந்தேகநபரின் மோட்டார் சைக்கிள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் நிறுத்துமாறு சமிக்கை செய்த போதிலும் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதையடுத்து, அதிகாரிகள் சந்தேக நபரை துரத்திச் சென்று நிறுத்தியபோது, ​​அவரிடம் இந்த ஐஸ் போதைப்பொருள் இருப்பதைக் கண்டனர்.
மேலும், சந்தேகத்திற்குரிய இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சில காலமாக ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவிக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews