நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு…!

வாழைச்சேனையில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதனால் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(19) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews