சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் (16/04/2024) பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு  மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட
முத்துஐயன்கட்டு, ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக மலசலகூடம் கட்டுமானப் பணிக்காக  1ம் கட்ட நிதியாக 75,000 ரூபா வழங்கப்பட்டதுடன்
வவுனியா –   கணேசபுரம் கிராமசேவகர்  பிரிவிலுள்ள  அறநெறிப் பாடசாலையின்
 கட்டிடம் அமைப்பதற்கான 2ம் கட்ட நிதியாக 150,000 ரூபாவும்  வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இவை உதவிகளை சந்நிதியான் ஆச்சிரிம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் அவரது ஆச்சிரம தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கிவைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews