தப்பியோடிய கைதிகளை 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கைது செய்த பொலிசார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது

திருட்டுச் சம்பவத்தில் 1வருட சிறைத்தண்டனை பெற்ற கைதியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியும்  சாவகச்சேரி நீதிமன்றில் அவர்களுக்கிருந்த பிறிதொரு வழக்கிற்காக இன்று(16)  காலை யாழ் சிறைச்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட போது தப்பியோடினர். விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிசார் 30 நிமிடத்திற்கு கைதிகளை மீண்டும் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றின்றில் முன்னிலைப்படுத்தினர்.

தப்பியோடிய குற்றத்திற்காக கைதிகளுக்கு 6 மாத சிறைத்தண்டணையும் 1500 அபராதமும் விதித்து தீர்ப்பனித்த  நீதாவான் ஏ.யூட்சன், தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews