திடீரென தீப்பிடித்த இராஜாங்க அமைச்சர் பயணித்த கார்..!

பண்டாரவளை – ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்ததாக தெரியவருகின்றது.

இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews