நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு- இருவர் கைது!

நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி கட்டிடத்தில் நடிகர் சல்மான் கானின் வீடு உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்தக் கட்டிடத்தின் வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் தங்கியிருந்த இருவரே மும்பை குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews