புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் 10 சிறைக்கைதிகள் விடுதலை…!

வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம்(13) 10 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக்கைதிகள் இன்று(13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில், வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதாணி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews