ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே எமது ஆதரவு….! மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கமாட்டோம்…! ஈ.பி.டி.பி அதிரடி அறிவிப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே நாம் ஆதரவு வழங்குவோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழில் இன்றையதினம்(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக போட்டியிடுவார். அவரையே நாம் ஆதரிப்போம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை ( மொட்டு கட்சி) எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews