செயற்கை நுண்ணறிவு மையத்தினை நிறுவுவது தொடர்பான சட்டங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி

டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் (AI Center) நிறுவுவது தொடர்பான சட்டங்கள் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (26) கொழும்பில் நடைபெற்ற டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் என்றும் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்  வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews