பிரதேச செயலக கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம் கணேசானந்தா வசம்

வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலக வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் இன்று 24.03.2024 கரப்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.

இதில் தாளையடி சென் அன்ரனீஸ் ,சிவனொளி, அணிகளை வெற்றிகொண்டு இறுதிப்போட்டியில் சக்திவேல் அணியுடன் விளையாடி வெற்றிபெற்று இவ் ஆண்டுக்கான மருதங்கேணி பிரதேச செயலக கரம்பந்தாட்டத்துக்கான வெற்றிக்கிண்ணத்தினை மருதங்கேணி கணேசானந்தா அணியினர் தமதாக்கிக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews