வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர்  மக்களின் காணிகள்  இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு,  ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு  ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது

இந் நிகழ்வு அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில்   இன்று இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர், காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews