தொடருந்து முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஆசிரியர்..!

ஆசிரியர் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் ரத்கம – புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று (20.1.2024) முற்பகல்  இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்து முன் ஆசிரியர் ஒருவர் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாதோட்டைஇ புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews