திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆ்சிரமத்தால் குடிநீர்  சுத்திகரிப்பு….!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசம் திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 290000/- பெறுமதியான  குடிநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதி வழங்கப்பட்டு இன்று  காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் செந்தில் ராஜ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நன்னீர் சுத்திகரிப்பு பொறியினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள்  திறந்துவைத்தார்
இந்நிகழ்வில் பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலை  மருத்துவர் கலாநிதி செந்தில் குமரன், சந்நிதியான் சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்களான சிவநாதன், தயாபரன், செ. ஞானசபேசன், சிறிகாந்தன், கு.தெய்வேந்திரம், மற்றும் தொண்டர்கள் ல, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews