யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது  கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை, பிரதான நுழைவாயிலில்  சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews