பச்சிலைப்பள்ளியில் எரிபொருள் நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப் பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையதின் திறப்பு விழாவில் இன்று 09.03.2024 பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக எரிபொருள் நிலையத்தின் பெயர் பலகை மற்றும் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

மேற்படி நிகழ்வில் வடபிராந்திய பொற்ரேலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர் , வடபிராந்திய கூட்டுறவு ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews