எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

நாட்டில் மீண்டும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால்,  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மோசடி செய்து அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை காட்டுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையில், நேற்றையதினம்(08) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாவினாலும், காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், வெள்ளை அரிசி கிலோ கிராம் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews