கனடாவில் குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டி கொலை

கனடாவின், ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

புதன் கிழமை இரவு தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் ஒரு தாய் அவரது 4 குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா என்ற பெண் மற்றும் 7வயது , 4 வயது , 2 வயது மற்றும் 2 மாதம் நிரம்பிய குழந்தைகளுமே உயிரிழந்துள்ளனர். குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த 6 பெரும் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அத்தோடு குறித்த குழந்தைகளின் தந்தை தனுஷ்கா விக்கிரமசிங்க பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சா கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக 6 முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

 

சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார். இவர் இலங்கை பிரஜை எனவும் மாணவராக கனடாவில் தங்கியிருந்தார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேக நபரும் குறித்த குடும்பத்திற்கு அறிமுகமானவர் எனவும் வீட்டில் வசித்து வந்தவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் குற்றவாளி வியாழகிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவருக்கு எதிரான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews