ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம் – ரிஷாத்திற்கு இன்று வழங்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் வீட்டில் பணியாற்றி வந்த ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலேயே ரிஷாத் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாத் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews