பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக கட்டைக்காடு றோ.க.த.க வில் பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று 25.02.2024 பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்று பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்து பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தனர்.

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவர்கள் பல்வேறு உதவித்திட்டங்களை செய்துவருகின்றபோதும் இன்னும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை

வடமராட்சி கிழக்கில் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் குறிப்பாக வகுப்பறை பற்றாக்குறை,ஆசிரியர் பற்றாக்குறை போன்ற மாணவர்களின் பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யாது காணப்படுகின்றன.

பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய இன்று பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு தமது பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை தாமே நிறைவேற்ற அயராது உழைக்கப் போவதாக றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews