கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் கால்கோள் விழா

யா/கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 22.03.2024 புது முக மாணவர்களின் வரவேற்பு விழா பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் மிகசிறப்பாக நடை பெற்றது.

புதுமுக மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல்,மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் முன்னாள் மாணவரும் தற்போது யா/ வயாவிளான் மத்திய கல்லூரியின் பிரதி அதிபருமான திரு.தயாபரன் குருக்கள் அவர்களும், சிறப்பு ,விருந்தினர்களாக முன்பள்ளி ஆசிரியர்கள்,ஸ்தாபக வம்சத்தினர்,மத குருக்கள்,புலம்பெயர் பாடசாலை பழையமாணவர் சங்க நிர்வாக செயற்பாட்டாளர்,ஆகியோர் கலந்து கொண்டனர்

அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews