வரலாற்றில் இன்று

*⭕வரலாற்றில் இன்று________*

1918 – லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1923 – ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1937 – அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
1945 – இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.[2]
1959 – சனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
1962 – மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
1978 – முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1983 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
1985 – இசுபுல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1986 – சோவியத் கப்பல் மிக்கைல் லெர்மொந்தோவ் நியூசிலாந்தில் மூழ்கியது.[3]
1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
1991 – நிக்கராகுவாவின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு மனாகுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1996 – சிகாகோ சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று மேரிலாந்தில் இன்னுமொரு தொடருந்துடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1998 – தாய்வானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
2013 – பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்..

Recommended For You

About the Author: Editor Elukainews