மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடைநிறுத்தக்கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

வடக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில், இன்று, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இன்று இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள, புதிய தவிசாளருக்கான தெரிவை இடைநிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து தாம் நீக்கப்பட்டமை, சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறும், முஜாஹிரினால், ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews