ஆபாச காணொளி ஒன்றை அனுப்பிய குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி பணி இடைநீக்கம்

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், வாட்ஸ்எப் மூலம் சக காவல்துறை உறுப்பினரின் மனைவிக்கு ஆபாச காணொளி ஒன்றை அனுப்பிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச காணொளி தொடர்பில், பெண்ணின் கணவரான காவல்துறை உறுப்பினர், சம்பவம் தொடர்பில், தமது சிரேஷ்ட அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, விசாரணையைத் தொடர்ந்து குறித்த காவல்துறை உறுப்பினர், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,

Recommended For You

About the Author: Editor Elukainews