துடிதுடிக்க யாழில் இடம்பெற்ற கொலை

யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது..

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டுக்காரர்களான உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது

வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்ட போது ஒருவர் கொட்டனால் தாக்க முற்பட்ட போது மற்றவர் கத்தியால் குத்தியுள்ளார்

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த 57 வயதான சந்தேக நபர் ஒருவர் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews