வடக்கு,கிழக்கில் பலத்த மழை எதிர்பார்ப்பு

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

எனவே, அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இந்த நாட்களில் அறுவடை செய்தல், காயவிடுதல் போன்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு இன்று (26) வெள்ளிக்கிழமை வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews