இளையராஜாவின் புதல்வி பவதாரணி (வயது 47) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழப்பு

இளையராஜாவின் புதல்வி பவதாரணி (வயது 47) உடல்நலக்குறைவு காரணமாக இன்று இலங்கையில் காலமான செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைத்த ராசைய்யா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர். பாரதித்திரைப்படத்தில் ‘மயில்போல பொன்னு ஒன்னு’ என்ற திரைப்பட பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொண்டார். அதேதேநரம் அவரது சகோதரர்களான கார்த்திக்ராஜா , யுவன் சங்கர்ராஜா ஆகியோரின் இசையிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமதாக கடந்த மூன்று மாதக்காலமாக இலங்கையில் சிகை்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று(25) மாலை 5.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். நாளை அவரது உடலம் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews