2024/2025 வருடங்களில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்!

2025ஆம் ஆண்டில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 2009.02.01ஆந் திகதி முதல் 2010.01.31ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியினுள் பிறந்த அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து 2024.03.31ஆம் திகதிக்கு முன்னர் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களுக்கு அல்லது தலைமை காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் மேலும், 2024ஆம் ஆண்டு கபொத (சா/தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள 2008.02.01 முதல் 2009.01.31 திகதி வரை பிறந்த இதுவரை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிள் விண்ணப்பங்களை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் இதன் மூலம் 16வயதை எட்டியவுடன் செலுத்த வேண்டிய உரிய காலத்திற்குள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதனால் அறவிடப்படும் தாமதக்கட்டணம் செலுத்துவதை இது தவிர்க்கும்.

Recommended For You

About the Author: Editor Elukainews