வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் பெருவிழா

யாழ் மறைமாவட்ட பங்குக்குட்பட்ட பிரசித்தி பெற்ற ஆலயமான புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியில் காலை 07.00 கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் குறித்த திருவிழா திருப்பலி ஆரம்பமானதோடு திருவிழா திருப்பலியை சவேரியார் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அச்சுவேலி பங்குத்தந்தை -மைக்கல் செளந்தர நாயகம் ஒப்புக் கொடுத்தார்.

வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக பொறுப்பாளர்,தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர் றமேஸ் அடிகளாரும் இணைந்து திருப்பலியை சிறப்பித்ததோடு திருப்பலி நிறைவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததோடு தங்களது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews