பிரசித்தி பெற்ற புல்லாவெளி செபஸ்தியார் ஆலய நற்கருணை பெருவிழா

இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாவின் ஆயத்தநாளாகிய இன்று நற்கருனை நாதருக்கு பெருவிழா கொண்டாடப்பட்டது.

இன்று மாலை 05.00 மணிக்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழாவின் நற்கருணை வழிபாட்டை கிளி முல்லை மறைக்கோட்ட கியூடெக் நிறுவனப் பணிப்பாளர் அருட்பணி செபஜீவன் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து திருப்பலியில் பங்கெடுத்ததோடு திருநாள் திருப்பலி நாளை காலை 06.00 ஒப்புக்கொடுக்கப்படுமென பங்குத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews