றமேஸ் அடிகளாருக்கு உயரிய விருது

அருட்தந்தை றமேஸ் அமதி அடிகளாருக்கான உயர்நிலை கெளரவ விருது.* 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப் பணியாளர்கள் மற்றும் அறங்காவலர் சபையினர், மதகுருக்கள் முன்னிலையில் விருதுவழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அவரது சமூகத் தன்னார்வ தொண்டுப் பணிக்காகவும், நாட்டில் மனித நேயத்தையும் மனித மாண்பையும் பாதுகாத்து மேம்படுத்தம் செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமைக்குமாக கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டவும், மனித தர்மத்தைக் காக்கவும் ஆற்றிவரும் பணிக்காக இலங்கை அரசினால் வழங்கப்படும் உயர் விருதான ‘ *தேசபந்து மனிதாபிமானம் மிக்கவர்’* விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அவர் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews