இன்றும் நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை இன்றைய தினமும் தொடரும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுகளிலும் இன்றையதினம் தொடர்சியாக கன மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வயல் நிலங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews