கடலில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்! இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு.. |

வடமாகாண கடலில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தமது மீனவர்கள் காயமடைந்ததாகவும் இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆற்காட்டு துறையைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன் பிடிக்க சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்திய மீனவர்கள் வடக்கு கடலில் எல்லை தாண்டி வடக்கு மீனவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை நாசப்படுத்தி வரும் செயற்பாடு அண்மைக் காலமாக அதிகரித்துள்ள

நிலையில் இந்திய மீனவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews